2021 டி20 உலகக் கோப்பை 2021ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
டி 20 போட்டி 2022 ஆஸ்திரேலியாவில் நடக்கும்
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடக்க இருந்த ஆண்கள் டி 20 உலக கோப்பை கொரோனா காரணமாக 2022 இல் நடைபெறும் என்று ஐ.சி.சி தெரிவித்தது. 2021ல் ஆண்கள் டி 20 உலகக் கோப்பை 2021 திட்டமிட்டபடி இந்தியா நடத்தும் என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறவிருந்த பெண்களின் 50 ஓவர் உலகக் கோப்பை 2022 ஆம் ஆண்டு நடத்த ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி பெண்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை 2021 பிப்ரவரி-மார்ச் போட்டிகள் 2022 ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. டி 20 உலகக் கோப்பை இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடத்த இருந்தது, ஆனால் கொரோனா தொற்று மற்றும் பயணக் கட்டுப்பாடுகளுக்கு இடையே 16 அணிகள் கொண்ட போட்டியை நடத்துவதற்கான சிக்கலான சவால்கள் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது.