மக்களவை தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்து இருந்தார். இதற்கேற்ப ரூ.1,000 உரிமை தொகை விண்ணப்பித்து, விடுபட்டவர்களுக்கும் கிடைக்கும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருந்தார். அதேபோல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணியும், தேர்தல் முடிந்தவுடன் தொடங்கும் என தெரிவித்து இருந்தனர்.
அப்படி போடு.., அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம் ரீ-ரிலீஸ்.. என்னைக்கு தெரியுமா??
மறுபுறம் மாநில அரசின் நிதி திட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் எந்தவித தடையும் விதிக்காது என தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதனால் இதற்கான ஏற்பாடுகளை 15 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.