ஒரு வழியாக குறைந்தது தங்கத்தின் விலை – பொதுமக்கள் நிம்மதி!!

0
Gold
Gold

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்து உள்ளதால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோர் நிம்மதி அடைந்து உள்ளனர். இதனால் வரலாறு காணாத உயரத்தில் இருந்த தங்கத்தின் விலை சிறிது குறைந்து உள்ளது.

தங்கத்தின் விலை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைப் போன்று தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 7 மாதத்தில் மட்டும் ஒரு சவரன் 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டு இருந்த மக்கள் இந்த விலை உயர்வால் மேலும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததே இந்த கிடுகிடு விலை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Gold Purchase
Gold Purchase

தொடரந்து 3 வது ஆண்டாக வளர்ச்சி விகிதம் – 2 வது இடத்தில் தமிழகம்!!

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்து உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 36 ரூபாய் குறைந்து ரூ.5,380-க்கு, ஒரு சவரன் ரூ.288 குறைந்து ரூ.43,040 ஆகவும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.83.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here