தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்றும், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் ஒன்று உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை:
நாளை காக்கி நாடா பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ளதால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை, திருநெல்வேலி, தென்காசி, கோவை, காஞ்சிபுரம், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்குமென்றும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மஹாபலிபுரம், பெரியாறு, திருக்கழுக்குன்றம் பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது, சின்னக்கல்லார், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
அக்டோபர் 12 மற்றும் 13 தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் இந்த தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வார இறுதியில் ரிசல்ட், முறையாக எழுதாதவர்கள் ஆப்சென்ட் – அண்ணா பல்கலை அதிரடி!!
அக்டோபர் 13 முதல் 15 ஆம் தேதி வரை அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.