முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு நீதிமன்ற காவலும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தீவிரமாகும் IPL களம்.. இன்று கொல்கத்தா – டெல்லி அணிகள் பலப்பரீட்சை..!
அந்த வகையில் இன்றுடன் (ஏப்ரல் 29) நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு 35 வது முறையாக மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.