தற்போது தமிழ் மட்டும் அல்லாமல் அனைத்து மொழி திரைப்படங்களிலும் கலக்கி கொண்டு இருப்பவர், நடிகை ராஸி கண்ணா. அவரது ரசிகர்களை மேலும் கிறங்கடிக்கும் வகையில் ஒரு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிறக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தொடர் வெற்றி படங்கள்:
தமிழ் திரையுலகில் “இமைக்கா நொடிகள்” படம் மூலமாக அறிமுகமானவர், ராஸி கண்ணா. அவரது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். அவர் முதன் முதலாக 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் அறிமுகமானார். அவரது பப்ளியான முகத்திற்கும் அவரது குழந்தைத்தனமான சிரிப்பிற்கும் பலர் அடிமை. தமிழில் இமைக்கா நொடிகள் வெற்றியினை தொடர்ந்து அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற தொடர் வெற்றிப்படங்களை அளித்தார்.
அதே போல் தற்போது மேதாவி, அரண்மனை 3, சைத்தான் க பச்சா போன்ற புதிய படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகிலும் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துள்ளார்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இந்த பொது முடக்க காலத்தில் திரைப்பிரபலங்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தனர், அதே போல் ராஸி கண்ணாவும் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
கவர்ச்சிகரமான போட்டோஷூட்:
திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல், அடக்கமான பெண்ணாக நடித்த ராஸி கண்ணா, தற்போது கவர்ச்சி தூக்கலாக போட்டோஷூட் நடத்தி தனது ரசிகர்களை கிறக்கத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அவரது சில ரசிகர்கள் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். வெள்ளை வண்ண லேசான துணியில் மீன் செதில்கள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த உடை.
லேசாக சூரிய ஒளிபடுவது போலவும், தரையில் அமர்ந்திருப்பது போலவும் இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை அவரை இது போன்ற கோணத்தில் பார்க்காத ரசிகர்கள் அவரது அழகை பார்த்து வாய் அடைத்து போயுள்ளனர். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் அள்ளுகிறது.