தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரகளுக்கு இனி ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணமாக 5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணையினை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் நிவாரணங்கள்:
கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய அரசால் கொரோனா நோய் பரவல் அச்சத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து சில மாதங்கள் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக பலரும் தங்களது வேலையினை இழந்தனர். பொருளாதார ரீதியாக மிகவும் அவதி அடைந்தனர். இதனால் தமிழக அரசு மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளிலும் ஈடுபட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
முதற்கட்டமாக ரேஷன் அட்டைதார்களுக்கு அரசு சார்பில் 1000 ரூபாய் ரொக்கமாக கொடுக்கப்பட்டது. பலருக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த கூடிய வண்ணம் பல தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் காரணமாக தமிழகத்தில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. இது மட்டும் அல்லாமல் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் மற்றும் பல மருத்துவ விழிப்புணர்வும் வழங்கப்பட்டு வந்தன.
2வது நாளாக அதிரடி விலை குறைப்பில் தங்கம் – நகைப்பிரியர்கள் உற்சாகம்!!
தற்போது, தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரகளுக்கு இனி ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணமாக 5 கிலோ கொண்டைக்கடலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணையினை வெளியிட்டுள்ளது. கொரோனா பெரும் தொற்றிற்கான நிவாரணமாக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. தேவையான அளவுகளில் கொண்டக்கடலை அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் அடுத்த 5 மாதங்களுக்கு தொடர்ச்சியாக 1 கிலோ கொண்டைக்கடலை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.