முட்டையை வைத்து நாம் இதுவரை ஆம்லேட், கட்லெட், கலக்கி, பொரியல் என நிறைய டிஷ் செய்துள்ளோம். இப்பொது ஆம்லேட் குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை 4, பெரிய வெங்காயம் 3, பட்டை கிராம்பு, தக்காளி 2, பச்சைமிளகாய் 2. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி , மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி , தேங்காய் அரைமூடி, மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி, மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு.
செய்முறை
முதலில் ஒரு பௌலில் முட்டை சேர்த்து அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சிறிது சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இப்பொது இதனை தோசைக்கல்லில் ஊற்றி ஆம்லேட் செய்துகொள்ளவும். அதை சதுரமாக வெட்டி எடுத்துவைத்துக்கொள்ளவும்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சேர்த்து பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன்பின் தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். தேங்காயில் பால் எடுத்து அதில் ஊற்றவும். பின்பு கொதி வந்ததும் ஆம்லேடை அதில் சேர்த்து கெட்டிப்பதத்திற்கு வந்ததும் இறக்கி பரிமாறவும். இப்பொழுது ஆம்லேட் குழம்பு தயார்.