இயல்பாகவே இட்லி, சப்பாத்தி பிரியர்களை விட , தோசை பிரியர்கள் தான் ஏராளம். அதன்படி சாதா தோசை, நெய் தோசை ,மசால் தோசை, கல் தோசை, கொத்தமல்லி தோசை, புதினா தோசை என்று தோசையில் பல வகைகள் உள்ளன. இந்த நிலையில் மும்பை ஏர்போர்ட்டில் ஓர் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அதை பற்றி இதில் காணலாம். அதாவது மும்பை விமான நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் ஒரு தோசை வாங்கி சாப்பிட்டு உள்ளார்.
அதன் பிறகு அந்த தோசையின் விலையைப் பார்த்ததும் அவருக்கு தலை சுற்றி போனது. ஏனென்றால் அந்த ஒரு தோசையின் விலை ரூபாய்.600 ஆகும். வேறு வழியின்றி அந்த தொகையை செலுத்தி விட்டு சென்றுள்ளார். பொதுவாகவே ரயில் மற்றும் விமான நிலையங்களில் எல்லா பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன, ஆனாலும் ஒரு தோசைக்கு இவ்வளவு விலை வைத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு இடையே கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.