ஏய்.., உங்க அப்பானு பிராடு விடுறியா?? ரோகினியின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றிய  முத்து.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!

0
ஏய்.., உங்க அப்பானு பிராடு விடுறியா?? ரோகினியின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றிய  முத்து.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது அண்ணாமலை, முத்து இருவரும் ரோகிணியின் அப்பா பற்றி கேட்க ஆரம்பித்து விட்டனர். மேலும் அண்ணாமலை கல்யாணமாகி இத்தனை மாதம் ஆகிவிட்டது. ஆனால் இப்போது வரை உங்க அப்பா வரவில்லை. மேலும் போனில் கூட எங்களிடம் பேசவில்லை என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சியாகிறார். அப்போது விஜயா ரோகிணியை காப்பாற்ற ஏதேதோ சொல்லி மழுப்பி விடுகிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ரோகிணி சொன்ன அனைத்துமே பொய் என முத்து கண்டுபிடித்து விடுவாராம். மேலும் இதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்வாராம்.  ஆனால் அவர்கள் முத்துவை நம்ப மாட்டார்களாம்.
ஆனால் முத்து இந்த ரோகினியின் பித்தலாட்டத்தை எப்படியாவது அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பாராம். அப்போது ரோகிணியை பார்த்து நேருக்கு நேர் உங்க அப்பா மலேசியான்னு பொய் சொல்லிட்டு இருக்க. அப்படி ஒரு ஆளே கிடையாது. எனக்கு எல்லா உண்மையும் தெரியும் என்று முத்து போட்டு வாங்குவாராம். இது தெரியாத ரோகிணி முத்துவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்க வீட்டில் உள்ள அனைவருக்கும் சந்தேகம் வருமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here