நம் முகத்திற்கு நல்ல அழகை தருவது கண்கள் தான். அந்த கண்கள் சோர்வடையும் போது மிகவும் கலையிழந்து காணப்படும். நாம் எவ்வளவு அழகு படுத்தினாலும் கண்கள் சோர்வால் முகம் பொலிவு இல்லாமலே இருக்கும். கண்கள் சோர்வில்லாமல் இருக்க சில குறிப்புக்கள் உள்ளன.
கண்கள்
நம் கண்களை பராமரிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். கண்களை அடிக்கடி கழுவ வேண்டும். அதிக நேரம் மொபைல்களை பார்ப்பதால் கண்கள் சோர்வடைகின்றனர். இதனால் கருவளையம் ஏற்படுகிறது. முகமும் கலையிழந்துவிடுகிறது. அதிக நேரம் டிவி பார்ப்பது மொபைல் பார்ப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
இரவு தூங்க போகும்முன் கண்ணில் விளக்கெண்ணையை தேய்த்து படுத்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். இதனால் கண்கள் பளிச்சென்று இருக்கும். தினமும் கருவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் கண்ணாடி போட வேண்டிய அவசியம் இருக்காது. வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் கண்பார்வை அதிகரிக்கும். உடல் சூட்டையும் குறைக்கும்.