தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, இன்று அந்தமான் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக கனமழை:
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தேனி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலையில் உள்ள போளூர் பகுதியில் அதிகபட்சமாக 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், ஊத்தங்கரை பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக ஆண்டிப்பட்டி, திருவண்ணாமலை பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
- அந்தமான் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பலத்த சூறாவளி காற்று 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்க்கப்படுகிறது.
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மன்னார் வளைகுடாவில் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கடலோர ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர பகுதிகளில் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
மேலே குறிப்பிட்டிருக்கும் நாட்கள் மற்றும் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் விரைவாக கரைக்கு திரும்ப வலியுறுத்தப்பட்டுள்ளனர்.