அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான உணவு என்றால் அது மட்டன் தான். மட்டனில் செய்யும் கோலா உருண்டை அனைவருக்கும் விருப்பமான உணவு என்றே சொல்லலாம். ஆனால் இது புரட்டாசி மாதம் என்பதால் அசைவ உணவுகளை பலரும் சாப்பிடுவதில்லை. இந்நிலையில் சைவ வகையில் கோலா உருண்டை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் – 250 கி
பொரிகடலை
தேங்காய்
பூண்டு
இஞ்சி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2
கொத்தமல்லி – ஒரு கையளவு
செய்முறை
முதலில் மீல்மேக்கரை நீரில் போட்டு கொதிக்க வைத்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.அதன் பிறகு பொரிகடலை, வரமிளகாய், சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு போன்றவற்றை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு இந்த மீல்மேக்கரை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இப்பொழுது அதில் கடலை மாவு, மைதா மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து பிசையவும். இப்பொழுது அதனை உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான ‘சைவ கோலா உருண்டை’ தயார்.