தற்போது உள்ள தலைமுறையில் தான் விவாகரத்து பிரச்சனைகள் அதிகம் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் கருத்து வேறுபாடாக தான் இருக்கும். இப்பொழுது பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்க ஆன்மீகத்தில் சில பரிகாரங்கள் உள்ளன.
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர??
இன்றைய தலைமுறையில் பலரும் காதல் திருமணம் தான் செய்து கொள்கின்றனர். இதனால் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வதால் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் கூட சில நேரங்களில் விவகாரத்தில் தான் முடிகிறது. இதனை குறைக்க ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது அவசியம். அப்படி இல்லாதபட்சத்தில் இரண்டாவது முயற்சியே இந்த ஆன்மிகம். இப்பொழுது கணவன் மனைவிக்கிடையே இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க எளிய பரிகாரங்களை காண்போம்.
முதலாவதாக வயதான பிறகும் ஒற்றுமையுடன் வாழும் முதியவர்களின் ஆசிர்வாதம் நமக்கு தேவை. அவர்களுக்கு 60வது திருமணம் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் தவற விடாமல் செல்லுங்கள். அவர்களின் ஆசிர்வாதம் மிகவும் முக்கியமாகும். மேலும் வசதி இல்லாத முதியவர்கள், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குங்கள் தன்னால் குடும்பம் தழைக்கும். இதனால் உங்கள் ஜாதகத்தில் எதாவது தோஷங்கள் இருந்தால் கூட சரியாகி விடும்.
அடுத்த பரிகாரமாக பாம்பு பின்னி பிணைந்து இருப்பதை பார்த்தால் அதிர்ஷ்டம் என்று கூறுவார். அதனால் தான் அந்த சிலைகளை வைத்து நாம் வணங்கி வருகிறோம். இந்த மாதிரியான சிலைகள் அரச மரத்தடியில் தான் இருக்கும். அங்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ராகு காலத்தில் பால் மற்றும் மஞ்சளை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். இதனை மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் விவாகரத்து வரை சென்ற தம்பதிகள் கூட ஒன்று சேர்வார்கள்.