இன்னைக்கு வீக் எண்டு ஸ்பெஷல் ஆக “பிஷ் பிரியாணி”. மீன் வகைகளில் சிலர் மிகவும் விரும்பி சாப்பிடுவர். அவர்களுக்கு என்று ஸ்பெஷல் ரெசிபி இதோ..
தேவையான பொருட்கள்:
- வஞ்சரம் மீன் – அரை கிலோ
- பிரியாணி இலை – 1
- பட்டை – 1
- கிராம்பு – 1
- சோம்பு – 10 கிராம்
- ஏலக்காய் – 3
- இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
- பச்சமிளகாய் – 2
- காய்ந்த மிளகாய் – 2
- துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்
- வெங்காயம் – 2
- தக்காளி – 3
- தனியா தூள் – 2 டீஸ்பூன்
- பாசுமதி அரிசி – அரை கிலோ
- புதினா இலை – கொஞ்சம்
- கொத்தமல்லி இலை – கொஞ்சம்
- தேங்காய் பால் – அரை கப்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- முதலில், மசால் செய்ய மிக்ஸியில், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் போட்டு நன்றாக விழுதாக அரைக்கவும். அதில் வேண்டும் என்றால் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
- குக்கரை காயவைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
- பச்சை வாசனை போனதும், இதில் அரைத்த விழுதை மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இதில் மெதுவாக மீன் துண்டுகளை சேர்த்து கிளறவும். மீன் துண்டுகளை கிண்டும் போது கவனமாக இருக்கவும்.
- பின்பு, இதில் அரிசியை சேர்த்து, தேங்காய் பால், தண்ணீர் ஊற்றி ஒரு 2 விசில் வந்ததும், எடுத்து விடவும்.