உலகின் சென்டிபில்லியனர் என்ற அந்தஸ்தை பெறுகிறார், பேஸ் புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க். தற்போது 100 பில்லியன் சம்பாரித்து இந்த அந்தஸ்தை பெறுகிறார்.
பேஸ் புக் நிறுவனம்:
உலகில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலி என்றால் அது பேஸ் புக் தான். இது பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பதால் உலகில் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இந்த நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க்யின் தற்போதைய சொத்து மதிப்பு 100 பில்லியன்னை கடந்துள்ளது.
திமுக எம்எல்ஏ IP செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று – அதிர்ச்சியில் கட்சி நிர்வாகம்!!
இதன் மூலமாக பில் கேட்ஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகிய இருவருக்கும் அடுத்து இவர் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.
எப்படி இப்படி ஒரு வளர்ச்சி:
சர்ச்சைக்குரிய செயலியான டிக் டக் செயலிக்கு போட்டியிடும் விதமாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற ஒன்றை வெளிட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்த வெளியீட்டின் மூலமாக இந்த நிறுவனத்தின் பங்குகள் அதி விரைவாக கூடியுள்ளது. அந்த நிறுவனத்தி 13 சதவீத மதிப்பை மார்க் கொண்டுள்ளதால், அவரது சொத்து மதிப்பு இவ்வாறு கூடியுள்ளது.