சிக்கன், மட்டன், மீன் எல்லாம் சாப்பிட்டா கொரோனா வைரஸ் வருமா..? தெரிஞ்சு வச்சுக்கோங்க மக்களே..!

0

சீனாவில் ஹவான் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸினால் இதுவரை 3282 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது இது இந்தியாவிலும் பரவத்தொடங்கி இருப்பதால் இறைச்சி பிரியர்கள் மிகுந்த பயத்தில் உள்ளனர்.

ஆதாரம் இல்லை..!

கொரோனா வைரஸ் முதலில் ஒரு இறைச்சி சந்தையில் இருந்து தான் பரவியதாக கூறப்படுவதால் இந்தியாவிலும் கோழிக் கறி, ஆட்டுக் கறி மற்றும் கடல் உணவு களை உண்பதால் இந்த வைரஸ் பரவக்கூடும் என ஒரு வதந்தி தற்போது பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய உணவு தரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு விளக்கம் அளித்து உள்ளது.

இது குறித்து தெரிவித்த அந்த அமைப்பின் தலைவர், ஜி.எஸ்.ஜி. அய்யங்கார் கொரோனா வைரஸ் இறைச்சி மூலம் பரவுவதாக எந்த விதமான ஆதாரமும் இல்லை. மேலும் இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பபடவில்லை. மேலும் இந்த வைரஸ் பாதித்த நாடுகள் உட்பட அனைத்து நாடுகளில் இருந்து வரும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை எனவும் அவர் தெரிவித்தார். பச்சை மற்றும் பாதி வேகவைத்த இறைச்சிகளை உண்பதை தவிர்க்குமாறும் அவர் கூறினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here