சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க முடியாமல் தற்போது அனைவரும் விழி பிதுங்கி உள்ளனர். இந்த வைரஸிற்கு இதுவரை யாரும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் வருமுன் காப்பதே சிறந்தது.
கோவிட் 19 அறிகுறிகள்:
கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் இதுவரை 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் தற்போது இந்தியாவில் 28 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸினால் உருவாகும் நோய்க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டு உள்ளது.
- மூக்கு ஒழுகுதல் (சாதாரண சளி என நினைக்க வேண்டாம்)
- தீராத தலைவலி
- வறட்டு இருமல்
- சுவாசக் கோளாறு
- தொண்டை கரகரப்பு
- மூச்சுவிட சிரமப்படுதல்
- காய்ச்சல்
- உடல் சோர்வாக இருப்பது
- போன்றவை சாதாரண அறிகுறிகளாக தெரியலாம் ஆனால் இவை தான் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறியும் கூட. எனவே இதில் எதாவது ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
பாதுகாத்துக் கொள்வது எப்படி..?
- தங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்
- அடிக்கடி கைகளை சோப்புகள் அல்லது அதற்கென உள்ள திரவங்களை பயன்படுத்தி கழுவுங்கள்
- உங்களுக்கு இருமல் அல்லது தும்மல் வரும் போது மாஸ்க் போட்டு மூடிக் கொள்ளுங்கள்
- ஒருமுறை உபயோகப்படுத்திய டிஸ்ஸு பேப்பரை உடனடியாக அப்புறப்படுத்தி விடுங்கள்
- நன்றாக வேகாத இறைச்சியை உண்ணாமல் இருங்கள்
- விலங்குகள் விற்பனைக் கூடங்களுக்கு செல்வதை தவிர்த்திடுங்கள்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |