முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு நீதிமன்ற காவலும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றுடன் (ஏப்ரல் 22) நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு 34 வது முறையாக மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 250 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து வருவதால், தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Enewz Tamil டெலிக்ராம்
தமிழக வாக்காளர்களே., வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதற்கான காரணம்? தேர்தல் அதிகாரி தகவல்!!!