கர்நாடகா மாநிலம் தும்கூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
12 பேர் சம்பவ இடத்திலேயே..!
ஓசூர் அருகே உள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தாலா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பும் வழியில் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த காரில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுக்கு பின்னால் வந்த காரும் விபத்துக்கு உள்ளானதால் அதில் பயணம் செய்த பெங்களூருவைச் சேர்நத 2 பேரும் உயிரிழந்தனர்.
இதனால் அந்த இடத்தில சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |