தமிழகத்தில் ஏழை எளியோர்களுக்கு விரைவான மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு மருத்துவமனைகள். மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கடை நிலை ஊழியர்கள் 24 மணி நேரமும் பணிபுரியும் வகையில், ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் பயனாளர்களே., ஒரு நாள் சுற்றுலா அட்டை அறிமுகம்? இவ்ளோ தான் கட்டணம்?
அதன்படி காலை 6 முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலும் என மூன்று ஷிப்ட் அடிப்படையில், கடைநிலை ஊழியர்களுக்கு பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.