விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது புதிய திருப்பமாக கண்ணம்மா தைரியமாக வெண்பாவை எதிர்த்து பேசுகிறார். அதே போல் அவரது அடுத்த முயற்சியாக வேலையின் முதல் நாளை மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறார்.
“பாரதி கண்ணம்மா”
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் குடும்பபாங்கான சீரியல் தான் “பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலின் நாயகி கண்ணம்மா தற்போது மிகவும் துணிச்சல் மிகுந்த பெண்ணாக மாறி வருகிறார். தனது கற்ப்பை தனது கணவனே சந்தேகம் கொண்டதால் அவரை விட்டு பிரிந்து தனி ஆளாக குழந்தையையும் பெற்று வாழ்ந்து வருகிறார். இன்றைய எபிசோடில் கண்ணம்மா தான் சேரவிருக்கும் புதிய வேலைக்கு செல்கிறார். அங்கே மகிழ்ச்சியுடன் குழந்தையையும் கூட்டி கொண்டு தனது வேலையினை ஆரம்பிக்கிறார்.
குழந்தையை எங்கு வைப்பாய் என்று அங்கிருப்பவர்கள் கேட்கும் போது தடுமாறும் கண்ணம்மா பின் அங்கேயே குழந்தைக்கு தொட்டில் கட்டி தனது வேலையினை ஆரம்பிக்கிறார். பின், முதல் நாள் வேலைக்கு சென்றதால் கோவிலுக்கு செல்ல விரும்பும் கண்ணம்மா தனது குழந்தையுடன் அருகில் உள்ள கோவிலுக்கு செல்கிறார். அங்கே அவரது கணவரான பாரதி மற்றும் வெண்பா இருவரும் ஜோடியாக கோவிலுக்கு வருகின்றனர்.
வெண்பாவை மிரட்டும் கண்ணம்மா:
இதனை பார்க்கும் கண்ணம்மா ஆத்திரம் அடைகிறார். அர்ச்சகரிடம் தனது குழந்தைக்கு அர்ச்சனை செய்ய சொல்லிவிட்டு குழந்தையின் அப்பா பெயர் பாரதி என்றும் அவர் ஒரு மருத்துவர் என்றும் கூறுகிறார். இதனால், பாரதியும் கோபமடைகிறார்.
ஆனால், வெண்பா அவரை சமாதானம் செய்து விட்டு மரத்தடிக்கு அழைத்து செல்கிறார். அங்கே கண்ணம்மா சென்று உட்காரும் போது கண்ணம்மாவை வெறுப்பேற்றுவதற்காக வெண்பா பாரதியின் கையை இறுக்கமாக பற்றி கொண்டு நடக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடையும் கண்ணம்மா நேராக வெண்பாவை சென்று கன்னத்தில் ஒரு அறை விட்டு மிரட்டிவிட்டு வருகிறார். கூடுதலாக, இந்த உலகமே தனது குழந்தை பாரதியின் குழந்தை கிடையாது என்று சொன்னாலும் அதனை தான் ஏற்று கொள்ள முடியாது என்றும் கூறி விட்டு வருகிறார். பாரதிக்கு தனது குழந்தை பற்றி எப்போது தெரியும்? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கிடக்கின்றனர்.