மீனா வீட்டில் ஜீவா தங்குவதற்கு மறுப்பு தெரிவித்த அம்மா!! விறுவிறுப்படையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது நம்பர் ஒன் சீரியலாக உள்ளது. இதற்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. ஒரு சாதாரண குடும்பத்தில் அண்ணன் தம்பி, பாசம் பற்றிய கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்கள் மனதில் ஒரு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

pandian stores meena
pandian stores 

இந்த சீரியலில் முக்கிய ஜோடியாக இருப்பது கதிர் மற்றும் முல்லை. இவர்களுடைய காதல் தான் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். இந்த சீரியலில் உள்ள விறுவிறுப்பு குறையாமல் இருப்பதற்கு கடைக்குட்டி கண்ணனுக்கு ஜோடியாக புது நடிகையும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சீரியல். ஜீவா மற்றும் மீனா ஜோடிக்கு குழந்தை பிறந்த நிலையில், மூர்த்தி மற்றும் தனம், மீனாவின் வீட்டிற்கு வந்து குழந்தையை தூக்கி கொஞ்சுகிறார்கள். தனம் அந்த குட்டி பாப்பாவிடம் ‘சீக்கிரம் எங்க வீட்டிற்கு வா, உன்ன யார்கிட்டையும் தரமாட்டேன், நான் மட்டும் தான் உனக்கு எல்லாமே செய்வேன்’ என்று கூறுகிறார். அதை கேட்டு மீனாவின் அப்பா மிகுந்த கோவம் அடைந்து குழந்தையை தன் அத்தையிடம் கொடுங்கள் என்று கூறினார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதைத்தொடர்ந்து குழந்தையை பார்க்க ஜீவா, மீனா வீட்டிற்கு வந்தார். தன் குழந்தையை தூக்கி கொஞ்சத் தொடங்கினார். இதுதான் சரியான சமயம் என்று மீனாவின் அப்பா ஜீவாவை தன் வீட்டிலேயே தங்க வேண்டும் என்று கூறினார். ஜீவா அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

பின்பு மீனாவும் தங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். ஜீவா தனது அண்ணனிடம் கேட்கிறேன் என்று போன் செய்து கேட்டார். மூர்த்தி, இதுல என்ன இருக்கு பரவாயில்லை, அங்கையே தங்கிட்டு மறுநாள் வா என்று கூறினார். ஆனால், ஜீவாவின் அம்மா அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்பு தனம் மற்றும் மூர்த்தி, கதிர் முல்லையின் முதலிரவு தேதியை நாளை இரவு குறித்துள்ளார். அது தெரியாமல் கதிர், முல்லைக்கு மல்லிகைப்பூ மற்றும் அல்வா வாங்கி கொண்டு வர, அதை பார்த்த கண்ணன் அதனை வாங்கி எல்லாரிடமும் காட்டி பயங்கரமாக கலாய்த்து தள்ளி விட்டார்.

ஜீவாவின் அம்மா, ஜீவாவை வீட்டிற்கு வரவேண்டும் மீனா வீட்டில் தங்கக்கூடாது என்று போன் செய்து சொல்கிறார். அதை கேட்டு ஜீவா என்ன செய்யப் போகிறார்?? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here