Monday, April 29, 2024

வலியால் துடிக்கும் கண்ணம்மா, பிரசவம் பார்க்கப்போகும் வெண்பா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

Must Read

கடந்த சில நாட்களாக விறுவிறுப்பான திருப்பங்களுடன் செல்லும் “பாரதி கண்ணம்மா” யாரும் எதிர்பார்க்காத காட்சிகளுடன் இனி வர உள்ளது. காரணம், தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விறுவிறுப்பான திருப்பங்கள்:

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் “பாரதி கண்ணம்மா”. இந்த தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காரணம், இந்த சீரியல் எளிமையான கதைக்களத்துடன் அமைந்து இருந்தது தான். இதில் நடிப்பவர்களும் யதார்த்தமாக நடித்ததால் அனைவரும் விரும்பி பார்த்தனர். இப்படியாக இருக்க பொது முடக்கத்திற்கு பின் ஒளிபரப்பாகும் எபிசோட் அனைத்தும் விறுவிறுப்பான திருப்பங்களுடன் உள்ளது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு – ஆளுநரின் செயலர் பதிலளிக்க உத்தரவு!!

கதையின் நாயகன் பாரதி, சந்தேகப்பட்டதால் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியே சென்று தனியாக உழைத்து வாழ்ந்து வருகிறார். சௌந்தர்யா எத்தனையோ முறை அழைத்தும் கண்ணம்மா தனது பிடிவாதத்தில் இருந்து கொஞ்சம் கூட மாறவில்லை. தான் அந்த வீட்டிற்கு வரப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளார். அவரை நினைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் கவலை அடைந்துள்ளனர்.

அதிரடி திருப்பம்:

சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு எப்போது பிரசவ வலி வர போகிறது, அதனை அவர் எவ்வாறு சமாளிப்பார் என்று அச்சம் அடைந்துள்ளார். அவர் அச்சம் அடைந்தது போல் தற்போது கண்ணம்மா சாலையில் நடந்து செல்லும் போது பிரசவ வலி அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் சௌந்தர்யா அவரை தேடி கொண்டு மற்ற இடங்களில் அலைகிறார். இதில் உச்சக்கட்ட திருப்பம் என்னவென்றால் கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்க்கப்போவது வெண்பா..!!

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். வெண்பா கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்க்க போகிறாரா?? சௌந்தர்யா அதற்குள்ளாக கண்ணம்மாவை கண்டுபிடித்து விடுவாரா?? இது போன்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -