தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இணையவழி கல்வியில், மிக குறுகிய காலத்திலே படித்து முடித்துவிடலாம் என விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“யுஜிசி விதிகளின்படி உயர்கல்வி நிறுவனங்கள் பட்டப்படிப்புகளை பயிற்றுவிக்க யுஜிசியிடம் ஒப்புதல் பெற வேண்டும். அப்படி ஒப்புதல் வழங்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியல் deb.ugc.ac.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் 10 நாட்களில் MBA படிப்பை முடித்து விடலாம் என ஆன்லைனில் பொய்யான விளம்பரங்கள் செய்து வருகின்றனர். இந்த போலி விளம்பரங்களை மாணவர்கள் நம்பி ஏமாற வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.