உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உயிர்கொல்லி நோயான கொரோனா..!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 165 நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.75 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் 226 பேருக்கு கொரோனா உறுதி – தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் பாதிப்பு..!
இந்நிலையில், கொரோனா வைரசால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் எடுத்து வருகிறார்கள்.
சீனாவை மிஞ்சிய இத்தாலி..!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரசால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையில் சீனாவை விட இத்தாலியில் அதிக அளவில் உயிர் இழந்துள்ளனர்.
அரசுப் பேருந்து முதல் பயணிகள் ரயில் வரை நாளை எதுவும் ஓடாது – ஊரடங்கு உத்தரவு அதிரடி..!
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 81 ஆயிரம் பேர். சீனாவில் உயிர் இழந்தவர்கள் 3,250 பேரை தாண்டியுள்ளது. இத்தாலியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரம் பேரையும் தாண்டி செல்கிறது .
இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் மற்றும் ஈரான் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதுவரை உலக அளவில் கொரோனா வைரசால் 90 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |