அரசுப் பேருந்து முதல் பயணிகள் ரயில் வரை நாளை எதுவும் ஓடாது – ஊரடங்கு உத்தரவு அதிரடி..!

0
train
train

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைய தொடங்கி இருப்பதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதையடுத்து நாளை (மார்ச் 22) அன்று இந்திய மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

ஜனதா கர்ப்பியூ..!

பிரதமர் மோடி அவர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு தீவிர நடவடிக்கைகளை அனைத்து மாநில முதலமைச்சர்கள் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நாளை தமிழக அரசு பேருந்துகள் ஓடாது என தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. மேலும் நாளை 3700 பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது.

குறிப்பாக மார்ச் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவு ஏன்..? இதுக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா..?

சென்னை மெட்ரோ முதல் ஹோட்டல்கள் வரை எதுவும் இயங்காது – மார்ச் 22 ஊரடங்கு அதிரடி..!

எனவே, அத்தியாவசிய தேவைகளை தவிர பிற காரணங்களுக்காக பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் நாளை நடைபெற உள்ள சுப நிகழ்ச்சிகளுக்கு எந்த விதமான தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here