சென்னை மெட்ரோ முதல் ஹோட்டல்கள் வரை எதுவும் இயங்காது – மார்ச் 22 ஊரடங்கு அதிரடி..!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் வரும் மார்ச் 22ம் தேதி மக்கள் தங்களையே வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக பல மாநிலங்களில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மார்ச் 22 ஊரடங்கு:

மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும் இயங்காது என வணிகர் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். மேலும் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று அன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஹோட்டல்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மார்ச் 22 யாரும் வெளியில் வர வேண்டாம் – மோடி அறிவித்த ‘ஜனதா கர்ப்பியூ’..!

தமிழகத்தில் 22 ம் தேதி பால் விநியோகம் கிடையாது – பால் முகவர் சங்கம் அறிவிப்பு.!

அதுமட்டுமில்லாமல் சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து வசதியான மெட்ரோ ரயிலும் அன்று ஒருநாள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீனவர்களும் அன்று ஒரு நாள் கடலுக்குச் செல்ல மாட்டோம் என அறிவித்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here