இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே நடந்த கடும் போரை தொடர்ந்து. ஈரான்-இஸ்ரேல் நாடுகளிடையே போர் அறிகுறிகளுக்கான பதற்றம் தென்பட்டு வருகிறது. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், ஜி-7 உறுப்பு நாடுகள், கூட்டணியினர் மற்றும் நட்பு நாடுகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.
அதன்படி இனி வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராக, அமெரிக்காவின் கூட்டணி நாடுகள் பல்வேறு புதிய தடைகளை விதிக்கலாம். ஈரான் மட்டுமல்லாமல் ஈரானுக்கு ஆதரவு தரும் அமைப்புகளுக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்படும் என ஜேக் சுல்லிவன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனால் உலக நாடுகளிடையே பெரும் பதற்றம் நிலவுகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!