இந்தியாவில் ரயில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பல முக்கிய வழித்தடங்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விரைவிலே தீர்ந்து விடுவதால் பயணிகள் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!
அதாவது “பாஜக ஆட்சி செய்த, கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்களை, பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார். தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில், முன்பதிவு செய்யும் அனைத்து ரயில் பயணிகளுக்கும் டிக்கெட் உறுதி செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார்.