கடந்த 2 மாதங்களில் வெளியான மலையாளத் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு பதிவாகியுள்ளது. அதாவது தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, படத்தின் லாபத்தில் இருந்து 40% பங்கு தருவதாக கூறி ஏமாற்றியதாக அரூரை சேர்ந்த சிராஜ் வலியத்தரா என்பவர் புகார் அளித்துள்ளார். மேலும் சவ்பின் ஷாஹிர் மற்றும் பாபு ஷாஹிர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.