பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேனியில் உள்ள மங்களதேவி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற உள்ளது.
இந்த விழாவினை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். இதனால் அவர்களின் பாதுகாப்பு கருதி வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேனி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.