தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஏப்ரல் 19) மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அதில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளையும் 17.04.2024 மற்றும் 18.04.2024 ஆகிய தேதிகளில் திறக்க அறிவுறுத்துமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 2ம் தேதி நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.