இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அணிகள் தலா 6 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். இந்த வகையில், நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் லக்னோ அணியை எதிர்த்து கொல்கத்தா அணியும், மும்பை அணியை எதிர்த்து சென்னை அணியும் விளையாடினர்.
லோக்சபா தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கம்., இந்தந்த தேதிகளில்?
இந்த போட்டிகளின் முடிவில் சென்னை, கொல்கத்தா அணிகள் வெற்றி பெற்றன. இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தான் ராய்ஸ் அணி, 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.