லோக்சபா தேர்தலை நெருங்கி வருவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள் பலரும், சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
32வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!
இதனை கருத்தில் கொண்டு வரும் 17, 18 ஆகிய தேதிகளில் 10,214 சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாக தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளனர். அதேபோல் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க 16, 17 ஆகிய தேதிகளில் பயணம் செய்ய திட்டமிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.