32வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

0
32வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!
செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நீதிமன்ற காவல் தொடர்பான வழக்கு, இன்று (ஏப்ரல் 15) சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மீண்டும் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிப்பதாக உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவின் மூலம் 32 வது முறையாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here