நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வருவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்தியில் ஆளும் பாஜக-வின் தேர்தல் அறிக்கை, அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் புல்லட் ரயில்கள் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
அதன்படி அகமதாபாத்-மும்பை வழித்தடத்தை தொடர்ந்து தென்னிந்தியாவில் சென்னை, பெங்களூர் மற்றும் மைசூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் தொடக்க ஸ்டேஷனாக சென்னை சென்ட்ரலில் இருந்தும், 435 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில் இந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை?? வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!