தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை நாட்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவினை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்யும் விதமாக மே 11 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.