டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில், அமலாக்கத் துறையால் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அமலாக்கத்துறை கைது மற்றும் காவலுக்கு எதிராக புகார் மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்து இருந்தார். ஆனாலும் அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.
பாஜக அண்ணாமலை மீது தேர்தல் விதிமீறல் புகார்., இந்த நடவடிக்கை தான்? தலைமை தேர்தல் அதிகாரி உறுதி!!!
அதன்படி இன்று (ஏப்ரல் 15) கெஜ்ரிவால் புகார் மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மனு மீதான உரிய பதிலை, வரும் ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதோடு அடுத்த விசாரணை ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் என ஒத்தி வைத்துள்ளார்.