தமிழகத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு முன்கூட்டியே நடத்தி முடிக்க கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதியுடன் தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள், இனி தேர்வு நடைபெறும் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து ஆசிரியர்கள் பள்ளிக்கு வரணுமா? கூடாதா? என்ற நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக சில வட்டார கல்வி அலுவலர்கள் கூறுகையில், “ஆசிரியர்கள் ஏப்ரல் 15 முதல் 26 ஆம் தேதி வரையிலும், தேர்தல் பணி மற்றும் வார விடுமுறை தவிர்த்து, மீதமுள்ள நாட்களில் பள்ளிக்கு வர வேண்டும்.” என தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
வெற்றிகரமாக முடிந்த சோதனை ஓட்டம்.. சென்னை விமான நிலையத்தின் நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு!!