இந்திய மக்களிடையே விமான சேவைகளின் பயன்பாடானது அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் அதிக அளவிலான விமான நிலையங்களில் நிறுவுவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை விமான நிலையத்திலும் ஓர் நீண்டகால பிரச்சனை தீர்வுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கடந்த சில நாட்களாக சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளிலும் ஒரே நேரத்தில் விமானங்களை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும், இந்த மாத இறுதிக்குள் இதை நடைமுறைக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.