டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அமலாக்கத்துறை கைது மற்றும் காவலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த மனு தொடர்பான விசாரணை ஏப்ரல் 15ஆம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணையில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக முடிவு இருக்குமா? என ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.