இன்றைய காலகட்டத்தில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளில் மெஹந்தி, மருதாணி போடுவது வழக்கமாக உள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில், கை விரல்களில் மெஹந்தி மற்றும் மருதாணி போட்டிருந்தாள் ஒட்டு போட அனுமதி வழங்கப்பட மாட்டாது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதையடுத்து இது தொடர்பாக சென்னை தேர்தல் அலுவலர் கூறுகையில், “இந்த தகவல் முற்றிலும் ஆதாரமற்ற வதந்தி. இன்றைய சூழலில் மெஹந்தி போடுவது பலரது வழக்கமாக உள்ளது. எனவே வாக்குச்சாவடிகளில் பெயர் இருந்தால், தகுந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்.” என பதில் அளித்துள்ளார்.