தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களே., தபால் வாக்குப் பதிவுக்கு இதுதான் கடைசி நாள்? தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் வாக்குச் சாவடிக்கு வர முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தபால் வாக்கு அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 8ஆம் தேதி முதல் தபால் வாக்கு பெறப்பட்ட நிலையில், மொத்தமாக 8,400 பேர் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்து இதுவரை வாக்களிக்காமல் இருக்கும் பட்சத்தில், நாளை (ஏப்ரல் 18) மாலை 6 மணிக்குள் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்கு சென்று, தபால் வாக்கு  பதிவு செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

நடிகர் மன்சூர் அலிகான் திடீரென மருத்துவமனையில் அனுமதி., சோகத்தில் திரையுலகம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here