தமிழகத்தில் பெரும்பாலான மாவட்ட பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரிரு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்து இருந்தனர்.
இதைத்தொடர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர்.