கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை!!!

0
கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை!!!
தமிழகம் முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், நாளை மறுநாள் (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணிக்கு மேல், அரசியல் கட்சி வேட்பாளர் மற்றும் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய வாக்குறுதியை அளித்துள்ளார்.
அதாவது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை, தனியாருடன் இணைந்து அமைக்கப்படும். அதேபோல் ஜி.டி.நாயுடு பெயரில் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here