“Booth Slip” இல்லை என்றாலும் வாக்களிக்கலாம்.. தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

0
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 15) சென்னை தலைமை செயலகத்தில் பேட்டி அளித்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது, பூத் சிலீப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்காளிக்கலாம். மேலும் ஏப்ரல் 19ல் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர்கள் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here