கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 22) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனோஜ், சயான், ஜம்சீர் அலி, தீபு, பிஜின், ஜித்தன் ஜாய், சதீசன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஒருவரும் ஆஜராகவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் யாரும் ஆஜாராகாததால் விசாரணை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.