தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளனர். அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலும், அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 2,236 உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் கவின் நடித்த ‘STAR’ படத்தின் டிரைலர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இதைத்தொடர்ந்து வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையும் கருத்தில் கொண்டு, தற்போது கணக்கிடப்பட்டு கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியமர்த்த உள்ளனர். இதற்கான கலந்தாய்வும், அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து உபரி ஆசிரியர் குறித்த தகவலை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.