தற்போது கோடைகாலம் ஆரம்பமான நிலையில் அக்கினி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்னமே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தினால் இப்பொழுது மின்சாரத்தின் நுகர்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது வெயிலின் தாக்கத்தால் ஒடிசா மாநில அரசு மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளுக்கு அடுத்த 3 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.
அந்த மாநிலத்தில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதாலும் என்றும் சில இடங்களில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாண்ட வாய்ப்பு இருப்பதாலும் ஒடிசா அரசு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.